வெள்ளி, 30 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _009_1972_veera kesari Magazine from Sri Lanka

வணக்கம் நண்பர்களே வாழ்க்கையில் சோதனையில்லை எனில் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - வாழ்வு இனிக்காது என்பதே என் சிறிய மூளைக்குள் எப்பொழுதும் எழும் சிந்தனையாகவே இருக்கிறது. அந்த வகையில் வெறுமே தரவிறக்க சுட்டியுடன் உங்களுடனான உறவினை முடித்துக் கொள்வது என்பது என்னால் இயலாத ஒரு விடயம். அதனாலேயே மிக அரிதாக சிக்கிய அலெக்ஸ்சாண்டர் சாரின் பொக்கிஷ சித்திரக் கதையை தொடராக நீட்டிப்பு செய்வது என்பதும் நிகழ்கிறது.
தவிர,
 யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் ஒரு இருண்ட காலத்தில் எரிக்கப்பட்டு எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் திரும்பி வாரா உலகுக்கு சென்று விட்டன என்பது ஒரு தமிழன் என்கிற வகையில் எனக்கும் பெருத்த நட்டமே. அந்த மன வருத்தத்தை இப்படிக் கிடைத்த அரியதொரு சித்திரக் கதை கொஞ்சம் போக்கி விட்டது. இலங்கையில் எங்கோ பதிப்பாகி, கடல் தாண்டி ஆஞ்சநேயரைப் போல   மலை வளமிக்க- சஞ்சீவி மூலிகை மணக்கும் தென்றல் வீசிடும்  தேனீயின் ஒரு கூட்டுக்குக் கூடு பாய்ந்தது எவ்வாறு? அப்படியெனில் இன்னபிற நூல்களும் அங்ஙனமே கிடைத்திடின் அது வரலாறல்லவா? இந்த எண்ணங்களே இந்த வலைப்பூவில் இன்னும் தொடர்வதற்கு எனக்கான காரணம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்?!?!?!
இனி,
வாழ்ந்தது போதுமா?
வண்ணங்களில் குறை இருப்பின் தாராளமாக கலாய்க்கலாம். தொடர்பு இல்லாமல் மனதில் பட்ட வண்ணங்களை சோதனை முயற்சி என்கிற (ஹீ ஹீ ஹீ ) நிலையில் ஆங்காங்கு தெளித்திருக்கிறேன். சோதனை(!?!?!?!) வேண்டாமப்பா என்பவர்கள் அதனை அப்படியே ஸ்கிப் பண்ணிடுங்க நைனா! சர்தானே நான் சொல்றது? அக்காம்பா!





பெயின்ட்  டப்பா காலி. தேனீ அண்ணாச்சி  அலெஸ்சாண்டர் அனுப்புனாத்தான்  அடுத்து கலர் அடிக்கணும்! அப்படியே அந்த கரடி முடி பிரஸ் மறந்துடாதீங்க தலீவா! வர்ட்டா? அப்பாலிக்கா மீட்  பண்ணுவோம்பா!

1 கருத்து:

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...