வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கணத்தின் கீற்றில்...

பிதுங்கிய சிந்தனையில்
கசங்கிய மூளையில்
கருவுற்ற பிழையுற்ற
காகிதக் குப்பைகளைக்
கதை, கட்டுரை, கவிதையெனக்
கிறுக்கிக் கசக்கிக்
கிழித்தெறிந்தேன்!
கணத்தின் கீற்றின்
மின்னி மறையும்
வெளிச்சத்தில் கண்டேன்
ஒரு தரிசனம்
நெகிழ்ந்தேன் நான்.
என்னைச் சுற்றிலும்
காகித மலர்கள்!
இறைவா! ஆசீர் அளித்த
உனக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...