ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வலைத் தளத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம்..

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே. 
வலைதளத்தில் இயங்குகின்ற சில தளங்கள் இணைய இணைப்பிலேயே தங்கள் புத்தகங்களைப் படித்தலையும் அவ்வாறு  படித்து  நன்றாக இருந்தால் தங்கள் நூல்களை  அருகாமையில் உள்ள அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுவதையும் ஊக்கப்படுத்துவது என்பது உலகுக்குப் புதிய புதுமையானதொரு  செய்தியல்ல. அதே போல  பிடிஎப் ஆகக்  கூட  வாங்கிப்  படித்தல், டவுன்லோட்  செய்து  கொள்ளத் தனிக் கட்டணம்  என்பவையும் உலகமெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு சங்கதியே. உங்கள் பார்வைக்கு  சில ஆன் லைனில் அணுகிப் படிக்கக் கூடிய  வாசிப்புத் தளங்களை இணைத்துள்ளேன். உறுப்பினராகுங்கள். இலவசப் புத்தகங்களை வாசித்து  அனுபவியுங்கள். சில  கட்டண விகிதங்களுக்குட்பட்டவை. பல இலவசத் தளங்கள். முயற்சியுங்களேன். 

dc Comics Reading
நிற்க தமிழகத்தில் இருந்து உலகளாவிய சர்வதேச தமிழ் சமூகம் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிடும் முயற்சிகளில் பெரு வெற்றி கண்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்காகவும், தமிழ் மொழி வழங்கிடும் அத்தனை இந்து இடுக்குகளுக்கும் காமிக்ஸ் அனுபவத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் புதியதொரு மன்றம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
உறுப்பினராவதும், அதில் உள்ள இலவசப் புத்தகங்களை வாசிப்பதும், தேவை எனில் சந்தாக் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது வரையில் இருபது, இருபத்திரண்டு  புத்தகங்கள் மட்டுமே காணப்படுகிறது. பின்னர் சேர்க்கப்பட்டு கிடைக்கும்  வாய்ப்புள்ள  புத்தகங்கள் முக நூல் முகவரியிலும் காணக் கிடைக்கின்றன. முயன்று பாருங்களேன். யார் கண்டது. இதனை அடியொற்றி நிறைய வலைத் தள வாசிப்பு தளங்கள் துவக்கம் காணலாம். இது தமிழின் முதல்  முயற்சி என்பது மட்டும் இப்போதைய சேதி.

இதற்கிடையில் நண்பர்கள் பல வலைப் பூக்களை இப்போது புதிதாகத் துவக்கி இருக்கிறார்கள். 
மற்றும் நமக்கு நன்கு தெரிந்த ரஞ்சித் ஆகியோர்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 
புதிய வாசிப்பு  முறைகள்  அனைத்தும் வெல்லட்டும். 
என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன் ஜானி

அரசர் தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_012

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே..
வெகு  நாட்களாகக்  காத்திருந்த  தாவீது  அரசரின் வரலாற்றின் இறுதிப் பகுதி  இந்தக் கதை...
முதல் பாகம் இங்கே: http://johny-johnsimon.blogspot.in/2016/09/011.html
(நன்றிகள் சுட்டிக் காட்டியமைக்கு திரு.வைரம் அவர்களுக்கு)
இந்த  விவிலிய சித்திரக்கதையினை வெகு காலமாக பாதுகாப்பாக வைத்திருந்து நமக்காகக் கொடுத்துதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அன்னாரது  முயற்சிகளுக்கு  உறுதுணையாக  நின்றுதவிய குடும்பத்தாருக்கும் இறைவனின்  ஆசீர் கிடைக்கட்டும்.
 ரிலையன்ஸ் புண்ணியவான்களின்  தயவில்  இந்தப் பதிவினை  வலையேற்றுவதால் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அரசர் தாவீது தான்  சவுலின் கொலை வெறிக்குத்  தப்பி ஓடி ஒளிந்த காலத்திலும் சரி, மன்னராக முடி சூட்டப்பட்ட  காலத்திலும் சரி இறைவனுக்கு  புகழ் சேர்க்கும் கீதங்களையும், இசைக் கோர்வைகளையும்  இசைத்து  மகிழ்வாக  இருப்பார். அதனால் அவருக்கு விவிலியம் வழங்கிய சிறப்புப் பெயர் ஒன்று  உண்டு. அது சங்கீதக்காரன். இவரது பாடல்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கும்  இடம் விவிலிய நூலின் சங்கீதங்கள் பகுதியாகும்.



























வலைப் பூவில் ஒவ்வொரு பூவையும் மலரச் செய்வது என்பது பெரிய தவமாகும். முகநூலில் உள்ளது போன்ற இருவழிச் செய்திகளும் வேகவேகமான உரையாடல்களும், கிண்டல் கலாட்டாக்களும் இங்கே சாத்தியமல்ல. அமைதி  இங்கே உறைந்த ஒன்றாகும். இந்த நூலின் மின் பதிப்பு  வடிவினை நீங்கள் எங்கேனும் பகிரலாம். வெறுமனே  வலைத்தளத்தில்  கிடைத்தது  என்று மாய முரசு ராணி காமிக்ஸை நண்பர்  ஒருவர்  சமீபத்தில் தனது வலையில் பதிவேற்றினார். அந்த நூலை மின் வடிவாக்கம்  செய்த முயற்சிக்கு இந்தியா டுடேவில் நமது வலைப் பூவுக்கு மத்தியில் இடம் ஒதுக்கி சிறப்பு சேர்த்தார்கள் என்பதை அறிவீர்கள். மாயா மாயா டொம்ம் டொம்ம் டொம்ம் என்கிற அந்த மாய முரசொலியை இன்னுமொரு முறை இரசிக்க  இங்கே செல்லுங்கள். இது போன்று உரிய புத்தகங்களை உரிய நேரத்தில் வாசிக்கவும், மின் தடவல் மேற்கொள்ளவும் கொடுத்துதவிய அனைத்து நண்பர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள். கடவுளும்காலமும் அனுமதித்தால் அடுத்த கதையான..  
சாலமன் அரசரின் வரலாறுடன் தங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது  உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 
உங்களுக்குப் பிடித்தமான கதைகளை தமிழில் வாசிக்கவும் நேசிக்கவும்  
சந்தா  கட்டலாமே நண்பர்களே...



புதிய முயற்சியாக மலர்ந்துள்ள 
மன்றத்தில் இணைவதையும் யோசியுங்கள். 
பை...






சனி, 22 அக்டோபர், 2016

இது என் வானம்: விசித்திரப் பாடம்!

இது என் வானம்: விசித்திரப் பாடம்!: வணக்கம்  நண்பர்களே    !  வலைப்பூவில்  படம் இணைப்பதில்    இது    எனது   முதல்  முயற்சி  !  இணையத்தில்  காணக்கிடைத்த  சிறு  காமிக்ஸ்  கதை  ஒ...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

வாண்டுமாமா வாசகர்கள் தேடலுக்கு...

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே! 

வாண்டுமாமா  ஒரு சரித்திரம்..அவரது  நூல்கள் குழந்தைகளின் பொக்கிஷம்..அந்தக் கால  சிறார்களுக்கு  வாண்டுமாமாவின்  எழுத்துக்கள்  வரம். அவரது நூல்களைத்  தேடுவோருக்கு உதவும் விதத்தில் இந்தப் பதிவு.

தேடுங்கள்..இன்றும் பயன்தரத் தக்க பல கட்டுரைகள் நிறைந்த நூல்கள் வாண்டுமாமாவின்  வர்ணனையில் கொட்டிக் கிடக்கின்றன. தேடல் இனிதே சிறக்க என்  வாழ்த்துக்கள்! 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி  

திங்கள், 3 அக்டோபர், 2016

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...