திங்கள், 19 டிசம்பர், 2016

உத்துப் பாரு..சூதுகள் நூறு..

அது ஒரு பிரபலமான உணவகம். நான் குடும்பத்தாருடன் உணவருந்திய பின்னர் அதன் துணைக் கட்டடத்தில் இடம் பெற்ற நொறுக்குத் தீனி வகைகளைப் பார்வையிட்டேன். மகனின் கோரிக்கைக்கு செவிசாய்த்து எனது துணைவியார் ஒரு ஐஸ் குச்சியை (மாங்காய் ருசி) 63 ரூ. கொடுத்து வாங்கி வந்தார். நான் மகன் பிரிப்பதற்குள் அதனை வாங்கி விலையை நோக்க ₹.10 என அச்சிப்பட்டிருந்தது. அதைக் கேட்டால் வேறு பொருளுக்குரிய விலையை வாங்கியிருந்தனர். அவர்தம் கணினியில் அந்ப் பொருளே பட்டியலிடப்படவில்லை. ஏன் என்று கேட்டால் அங்கே போனைப் போடுகிறார்கள். இங்கே போனைப் போடுகிறார்கள். ஆனால் ஒரு முடிவுக்கும் வரத் தயங்குகிறார்கள். மகனை சமாதானப்படுத்தி ஸ்டிக்கை வாங்கித் திருப்பிக் கொடுத்து விட்டேன். நீதி:கடையைப் பார்த்து எடையைப் போடாதீங்கோ. கொஞ்சம் உற்றுப் பாருங்க பில்லை..இது எனது சொந்த அனுபவமே. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...