புதன், 18 ஜனவரி, 2017

கவனியுங்கள் காளையரே!

மாடு -- செல்வம் என்பது பொருள். செல்வத்தை இழக்க யார்தான் சம்மதிப்பார்? எம் மண்ணின் மைந்தராம் காளை மாடுகள் வளம் பெற வேண்டும். இனப்பெருக்கத்துக்கு பொலி காளைகளாகப் பெரும்பாலும் இருப்பவையே தவிர, அவற்றையும் ஏறு தழுவப் பயிற்றுவிப்பதும் உண்டு.  மற்ற அனைத்துக் காளைகளும் பெட்ரோல் போடத் தேவையில்லாத தாவர உண்ணியான உழைக்கும் வர்க்கம்தான். வண்டி இழுக்கும். ஆளில்லா விட்டாலும் தன் வீட்டுக்குத் தனது வண்டியை இணையாக இழுத்து நடந்து செல்லும் காளையர் உண்டு எம் மண்ணில். முன்னே மழலைகள் வந்தாலும் தவிர்த்துச் செல்வதை எம் கிராமங்களில் இன்றளவும் பார்க்கலாம். வண்டி யோட்டி வண்டியிலேயே படுத்துறங்கி வீடு சேர்வதை எம் தெருக்ககளில் காணலாம். நமது உழைப்புக்கான மரியாதை நமது உறவினங்களான மாடுகளே. மாடுகளான செல்வத்தைக் காத்துக் கொள்வதால் விவசாயிகளைக் காக்கும் தன்மைக்குத் தானாகவே ஆதரவுக் கரம் நீட்டுகிறோம். மனத்தில் வைங்க. மாடுன்னா செல்வங்க. மாடுன்னா கெத்துங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...